சென்னை: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மெரீனாவில்
உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும்
அமைச்சர்கள், மலர் தூவி மரியாதை செலுத்தினர். சர்வோதயா சங்கம் ஏற்பாடு
செய்திருந்த, நூற்பு வேள்வி மற்றும் பஜனையிலும் அவர்கள் பங்கேற்றனர்.
அன்பு, சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், தேச ஒருமைப்பாடு
ஆகியவற்றை வலியுறுத்தி, காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட சைக்கிள்
பேரணியை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். கிண்டி காந்தி
மண்டபம் வரை, பேரணி சென்றது. காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த, முதல்வர்
ஜெயலலிதாவை வரவேற்க, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள்
உள்ளிட்டோர் காத்திருந்தனர். அவர்களுடன், சபாநாயகர் பதவியை இழந்த
ஜெயக்குமாரும் நின்று முதல்வரை வரவேற்றார். சவுகார்பேட்டையில் உள்ள
கண்ணையால் அகர்வால் பால் நிகேதன் பள்ளி மாணவர்கள், 100 பேர், காந்தியடிகள்
போல் வேடமணிந்து, காந்தியின் சிந்தனைகளை பரப்பும் கோஷங்களை எழுப்பினர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments