குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் சமீபத்தில் கைது
செய்யப்பட்டனர். அவர்கள் தடுப்பு முகாம்கள் மற்றும் 40 போலீஸ் நிலையங்களில்
வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து கொள்ளுமாறு அவர்களை பணியில்
சேர்த்து விட்ட ஏஜெண்டுகளுக்கு குவைத் அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில்,
கைதான இந்திய ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள்
துன்புறுத்தப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும் குவைத்தில் உள்ள இந்திய
தூதரக அதிகாரி விது நாயர் தெரிவித்துள்ளார். யாரும் இதுவரை நாடு
கடத்தப்படவில்லை என்றும், அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும்
அவர் கூறினார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments