2003-இல் உலகின் பலபாகங்களிலும் பரவி நூற்றுக்
கணக்கானவர்கள் கொல்லப்படக் காரணமான சார்ஸ் வைரஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய்
ஒன்றை பிரிட்டனில் சிகிச்சையளிக்கப்படும் நபர் ஒருவரிடமிருந்து
மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டாரிலிருந்து விமான-ஆம்பியூலன்ஸ் மூலம்
லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம்
இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக இதேவிதமான சுவாசத்தைப் பாதிக்கின்ற வைரஸொன்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த புதிய வைரஸால் என்ன வகையான ஆபத்து உண்டாகலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.
இந்த தகவலின் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனமும் இதுவரை எந்தவிதமான வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாட்டுகளையும் விதிக்கவில்லை.
இதேவேளை, உலகில் 2 பேரிடம் இந்த வைரஸ் இதுவரை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தில் சுவாசநோய்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்குத் தலைவராக உள்ள பேராசிரியர் ஜோன் வொட்சன் கூறினார்.
சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்காக இந்த நோய் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments