சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநிலத் தலைவராக யுவராஜா மீண்டும்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநில நிர்வாகிகள்
தேர்வுக்கான ஓட்டு எண்ணிக்கை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. காலை
9:30 மணிக்கு துவங்கி, மதியம் 2:00 மணி வரை, ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு
எண்ணிக்கையின் போது, அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ்
பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகளைத் தவிர, மற்றவர்களுக்கு வளாகத்துக்குள் அனுமதி இல்லை. பிரதான வாசல் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் பட்டது.
மாநில நிர்வாகிகள் தேர்தலுக்கு, 25 பேர் போட்டியிட்டனர்; 20 ஆயிரத்து, 488 ஓட்டுகள் பதிவானது; 380 ஓட்டுகள் செல்லாதவை. இதில், முதலிடத்தைப் பெற்றவர் மாநிலத் தலைவராகவும், இரண்டாம் இடத்தைப் பெற்றவர் மாநில துணைத் தலைவராகவும், மூன்றாம் இடத்தைப் பெற்றவர் பொதுச் செயலர் பதவியும் வழங்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கையில், 6,557 ஓட்டுகள் பெற்று, இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு பெற்றார். லோக்சபா தொகுதிக்கான தேர்தலில்,அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில்,காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி தலைவர் ஐஸ்வர்யா, 1,260 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்; பொறியாளரான இவர், மத்திய அமைச்சர் வாசனின் ஆதர வாளர்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவியின் ஆதரவாளர் அமிர்தராஜா, நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில், வாசன் அணி முதல் இடத்தையும், சிதம்பரம் அணி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகளைத் தவிர, மற்றவர்களுக்கு வளாகத்துக்குள் அனுமதி இல்லை. பிரதான வாசல் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் பட்டது.
மாநில நிர்வாகிகள் தேர்தலுக்கு, 25 பேர் போட்டியிட்டனர்; 20 ஆயிரத்து, 488 ஓட்டுகள் பதிவானது; 380 ஓட்டுகள் செல்லாதவை. இதில், முதலிடத்தைப் பெற்றவர் மாநிலத் தலைவராகவும், இரண்டாம் இடத்தைப் பெற்றவர் மாநில துணைத் தலைவராகவும், மூன்றாம் இடத்தைப் பெற்றவர் பொதுச் செயலர் பதவியும் வழங்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கையில், 6,557 ஓட்டுகள் பெற்று, இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு பெற்றார். லோக்சபா தொகுதிக்கான தேர்தலில்,அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில்,காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி தலைவர் ஐஸ்வர்யா, 1,260 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்; பொறியாளரான இவர், மத்திய அமைச்சர் வாசனின் ஆதர வாளர்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவியின் ஆதரவாளர் அமிர்தராஜா, நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில், வாசன் அணி முதல் இடத்தையும், சிதம்பரம் அணி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments