Saturday, September 29, 2012

thumbnail

எஸ்.எச்.கபாடியா ஓய்வு பெற்றார்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் பதவி ஏற்றார்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எச்.கபாடியா நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
 
ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.
 
புதிய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். 1948-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும், வக்கீல் படிப்பும் படித்து 1973-ல் வக்கீலாக பணியாற்ற தொடங்கினார்.
 
1990-ல் கொல்கத்தா ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ல் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், அதே ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.இவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பதவி வகிப்பார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்.
 
முன்னதாக நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவுக்கு பிரிவுபசார விழா நடந்தது. அப்போது பேசிய கபாடியா, புதிய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஆபிரகாம் லிங்கன் போன்றவர் என்று புகழாரம் சூட்டினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About