Saturday, September 29, 2012

thumbnail

யோகா இந்து மதத்திற்கு உட்பட்டது: பிரிட்டன் சர்ச்சில் தடை

கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்பு நடத்த பிரிட்டன் சர்ச் தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் சவுத் ஆம்ப்டன் பகுதியில் உள்ள செயின்ட் எட்மண்ட்ஸ் சர்ச் வளாகத்தில் கோரி விதெல் என்பவர் யோகா வகுப்புகளை நடத்தி வந்தார்.
அவர் பலரிடம் யோகாசன பயிற்சிகளை கற்று வந்தனர். இந்நிலையில் யோகா இந்துக்களின் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று, கத்தோலிக்க மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்புகளை உடனே நிறுத்துமாறு கோரி விதெலுக்கு சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து யோகா வகுப்புகளை பாதியிலேயே கைவிட நேர்ந்ததாக கோரி வருத்தப்பட்டார்.
இதுகுறித்து கோரி மேலும் கூறுகையில், யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்தி கூறுவதை இதற்கு முன், நான் கேள்விப்பட்டதே இல்லை.
எனது வகுப்புகளில் தியானம் தொடர்பான விஷயம் எதுவும் இல்லை, யோகா முறைப்படி உடற்பயிற்சிகளை மட்டும் தான் கற்றுத் தந்தோம்.
உடற்பயிற்சிகளை எப்படி மதத்துடன் சம்பந்தப்படுத்துகின்றனர் எனத் தெரியவில்லை என்றார்.
போர்ட்ஸ்மவுத் கத்தோலிக்க பேராயர் அலுவலக தகவல் தொடர்பாளர், யோகாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், கிறிஸ்தவத்துக்கு தொடர்பில்லாத செயல்பாடுகளை கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அனுமதிக்க மாட்டோம்.
யோகா என்பது இந்து மத தியானமாக கருதப்படுகிறது. தேசிய அளவில் இது தொடர்பான கொள்கை எதுவும் இல்லை.
இருப்பினும் யோகா தொடர்பாக அந்தந்த சர்ச் பாதிரியார் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About