Sunday, September 23, 2012

thumbnail

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 10 நாளில் முடிவடையும் என்று டெல்லியில் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அவற்றை இந்திய அணுசக்தி கழகம் பூர்த்தி செய்து, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் அணு உலையில் எரிபொருள் நிரப்ப, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், மறுநாள் (புதன்கிழமை) காலையில், முதலாவது அணு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உருளைகள் எரிபொருளாக நிரப்பும் பணி தொடங்கியது. ஒவ்வொன்றும் 5 செ.மீ. விட்டமுள்ள 163 யுரேனியம் உருளைகள் அதில் நிரப்பப்படும். இந்த எரிபொருள் நிரப்பும் பணி இன்னும் 10 நாட்களில் முடிவடையும்’’என்று தெரிவித்துள்ளார். எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டதும், தேசிய அணுசக்தி கழகம் அந்த யுரேனியத்தை பிளந்து, மின் சக்தியாக மாற்றும் (மின் உற்பத்தி) வேலைகளை தொடங்கும். முன்னதாக, ஒவ்வொரு கட்ட பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த கட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை அணுசக்தி கழகம் பெறும். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை திறனாய்வு செய்து, அனுமதி வழங்கியதும், அதன் மேற்பார்வையில் மின் உற்பத்தி தொடங்கும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About