Thursday, September 27, 2012

thumbnail

நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மத்திய அரசு அண்மையில் அறிவித்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை தரப்படும் என்று முதலமைச்சர் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்த 1,250 ரூபாயுடன் தமிழக அரசு சார்பில் 50 ரூபாய் சேர்த்து 1,300 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள 1,280 ரூபாயுடன் 70 ரூபாய் கூடுதலாக 1,350 ரூபாய் கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு தரப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா உள்பட தமிழகம் முழுவதும் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உடனுக்குடன் அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About