மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன்
ஜாமின் வழங்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை கைவிரித்து விட்டது. கிரானைட்
மோசடி வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த முன் ஜாமின்
மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.
மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின்படி தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள குவாரி மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
மதுரை மேலூர் பகுதியில் குவாரி நடத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்த பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக குவாரி உரிமையாளர் மற்றும் கனிம வளத்துறை உயர் அதிகாரிகள், முன்னாள் மாவட்ட கலெக்டர் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சொத்து மற்றும் முறைகேடான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச்சென்றனர்.
இந்நிலையில் மதுரையில் ஒலிம்பஸ் என்ற பெயரில் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். இவரது குவாரியிலும் முறைகேடு நடந்திருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தயாநிதி அழகிரி முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. மதிவாணன் மனுவை தள்ளுபடி செய்தார்.
சிந்து கிரானைட் நடத்தி வரும் பி.கே.செல்வராஜ், இவரது மனைவி சாந்திசெல்வராஜ், மகன் சூர்யபிரகாஷ், ( முன்ஜாமின்) முன்னாள் கனிமவள உதவி இயக்குனர் சண்முகவேல் ( ஜாமின் ) தயாநிதிஅழகிரி ( முன்ஜாமின்) ஆகியோர் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதில் சாந்தி செல்வராஜூக்கு மட்டும் முன்ஜாமின் வழங்கி ஏனைய 4 பேர் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின்படி தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள குவாரி மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
பல ஆயிரம் கோடி சம்பாதிப்பு :
மதுரை மேலூர் பகுதியில் குவாரி நடத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்த பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக குவாரி உரிமையாளர் மற்றும் கனிம வளத்துறை உயர் அதிகாரிகள், முன்னாள் மாவட்ட கலெக்டர் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சொத்து மற்றும் முறைகேடான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச்சென்றனர்.
இந்நிலையில் மதுரையில் ஒலிம்பஸ் என்ற பெயரில் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். இவரது குவாரியிலும் முறைகேடு நடந்திருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தயாநிதி அழகிரி முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. மதிவாணன் மனுவை தள்ளுபடி செய்தார்.
சிந்து கிரானைட் நடத்தி வரும் பி.கே.செல்வராஜ், இவரது மனைவி சாந்திசெல்வராஜ், மகன் சூர்யபிரகாஷ், ( முன்ஜாமின்) முன்னாள் கனிமவள உதவி இயக்குனர் சண்முகவேல் ( ஜாமின் ) தயாநிதிஅழகிரி ( முன்ஜாமின்) ஆகியோர் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதில் சாந்தி செல்வராஜூக்கு மட்டும் முன்ஜாமின் வழங்கி ஏனைய 4 பேர் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments