Saturday, September 29, 2012

thumbnail

இளைஞர் காங்கிரஸ் தேர்தல்: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அதிக அளவில் வெற்றி

தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சட்டமன்ற தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பாராளுமன்ற தொகுதி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் ஆதரவாளர்களுக்கும், கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 38 பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாசன் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி இருப்பதாக கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அணியைச் சேர்ந்தவர்கள் தென் சென்னை, தருமபுரி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளை கைப்பற்றி உள்ளார்கள். இவை தவிர 3 தொகுதிகளில் எந்த அணியையும் சாராதவர்களும், 3 தொகுதிகளை பிரபு ஆதரவாளர்களும், மாணிக்கம்தாகூர், இளங்கோவன், தங்கபாலு ஆதரவாளர்கள் தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை 21 தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை 24 தொகுதிகளை கைப்பற்றி உள்ளோம் என்று வாசனின் ஆதரவாளரும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான யுவராஜ் கூறினார். சட்டமன்ற தொகுதி அளவிலும் அதிக தொகுதிகளை வாசன் ஆதரவாளர்களும், அதற்கு அடுத்ததாக கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்களும் கைப்பற்றி உள்ளனர். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம் அடைந்ததால் திருச்சி தொகுதி ஓட்டுகள் எண்ணிக்கை இன்று மாலை நடக்கிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About