Thursday, September 27, 2012

thumbnail

வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை-


மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச தரத்திலான புத்தமத மற்றும் அறிவுசார் பட்டப்படிப்புக்களை கற்பிக்கவிருக்கும் தர்ம தம்ம பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்க சிறிலங்காவின் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், இம்மாநிலத்தை ஆளுவது பாரதிய ஜனதா தளம். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் அனுமதியின்றி இந்திய நடுவண் அரசு செயற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் தீங்குகளையே விளைவித்து வருகிறார்கள் என்பது இதிலிருந்து நன்கே தெரிகிறது. தமிழகத்தில் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியதும், சவுகானின் ஒப்புதல் பெறாமல்தான் இந்திய நடுவண் அரசு மகிந்தாவை வரவழைத்துள்ளது என்று பா.ஜ.கட்சியினர் கூறி வருகிறார்கள். வை.கோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேசம் சென்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேச எல்லையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ பிரச்சனை தமிழர்களை காட்டுமிராண்டி தனமாக கொன்று குவித்த மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர். போராட்டம் நடத்தச் சென்ற வைகோவை, மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்த நிறுத்தனர். 40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார். அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர். அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்தனர். இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த பொலிஸார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About