மின்வெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கட்சியின் நிர்வன தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக மின்சார தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பகல் மட்டுமின்றி இரவிலும் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்தது 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால் தொழில்கள் பெருமளவு பாதிக்கிறது.
இதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு பாரிவேந்தர் கூறி உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வன் விரிவாக செய்து வருகிறார். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் காலை 10 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் முத்தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக மின்சார தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பகல் மட்டுமின்றி இரவிலும் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்தது 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால் தொழில்கள் பெருமளவு பாதிக்கிறது.
இதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு பாரிவேந்தர் கூறி உள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வன் விரிவாக செய்து வருகிறார். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் காலை 10 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் முத்தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டுள்ளார்.
04:56
Tags :
Dr.parri venthar
,
ijk
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments