சட்டவிரோதமாக செம்மண் அள்ள உதவியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள 5 குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாக, வானூர் வட்டாட்சியர் குமாரப்பாலன் என்பவர், விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி கனிமவளத்துறைஅமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக செம்மண் அள்ள, உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிகளில் 90 அடி வரை செம்மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள 5 குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாக, வானூர் வட்டாட்சியர் குமாரப்பாலன் என்பவர், விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி கனிமவளத்துறைஅமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக செம்மண் அள்ள, உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிகளில் 90 அடி வரை செம்மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments