Friday, September 21, 2012

thumbnail

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கலைஞர் பேட்டி

செய்தியாளர் :- சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டினைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறதே, அதைப் பற்றி தி.மு.க.வின் கருத்து?
கலைஞர் :- தி.மு.கழகம் அதை ஏற்கனவே எதிர்த்திருக்கிறது. பல்வகைப் பொருட்கள் (மல்டி பிராண்ட்) சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால், இங்கேயுள்ள சிறு வணிகர்களுக்கும், அவர்களை நம்பியிருப்போருக்கும் பெரும் போட்டியாக அமைந்து விடும்.
இதனை நடை முறைப்படுத்துவதை மத்திய அரசு, மாநில அரசின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருப்பதால், நமது மாநிலத்தில் இதனை ஏற்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை.  இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் :- கடந்த முறை இந்தப் பிரச்சினை வந்தபோது தி.மு.கழகம் அதை எதிர்த்தது.
இப்போது எதிர்க்கிறீர்களா?  ஆதரிக்கிறீர்களா?
கலைஞர் :- விரும்புகிற மாநிலங்கள் அமல் படுத்தலாம் என்பதுதான் நிலை. நமது மாநிலம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்!

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About