Sunday, September 30, 2012

thumbnail

ரிங் ரோடு' ஒப்பந்தம் பெற போட்டி:அ.தி.மு.க.,வில் "பனிப்போர்'

மதுரை:மதுரை மாநகராட்சியில், "ரிங் ரோடு' அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் பெறுவதில், அ.தி.மு.க.,வினரிடையே "பனிப்போர்' நிலவுகிறது.போக்குவரத்து நெரிசலை குறைக்க, 27 கி.மீ.,க்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டது. உலக வங்கி மானியம் ரூ.16 கோடி, வங்கி கடன் ரூ.27 கோடி பெற்று, திட்டத்தை நிறைவேற்றினர். ஒரு தவணைக்கு, ரூ.2 கோடி வீதம், 15 ஆண்டில், 30 தவணையாக கடனை திருப்பித்தர, மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. அதன் பின், நெடுஞ்சாலைத்துறை வசம் ரோட்டை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டது.எதிர்பார்த்ததை விட, ரிங் ரோட்டில் நல்ல வருவாய் கிடைத்தது; ஆண்டுக்கு ரூ.4 ÷காடி கிடைத்ததால், அதை, விட மனமில்லாத மாநகராட்சி, கடனை செலுத்த, தாமதம் செய்கிறது. "வருவாயில் பெரும் பகுதியை, ஆண்டுதோறும், பராமரிப்புக்கு செலவிட வேண்டும்,' என்ற விதியையும், பின்பற்றுவதில்லை. மாநகராட்சிக்கும், தனிநபருக்கும் வருவாய் அள்ளிக் கொடுக்கும் ரிங் ரோடு; பராமரிப்பு இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு "எமனாக' உள்ளது. இதற்கிடையில், "ரிங் ரோடு' சுங்கச்சாவடி எண் 2 முதல் 5 வரையுள்ள ரோட்டை விரிவுப்படுத்தி, தடுப்புச்சுவர் அமைக்க, நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.7.80 கோடியில் பணிகள் தொடங்க உள்ளது. இப்பணி, வேறு துறைக்கு செல்லாமல், மாநகராட்சிகட்டுப்பாட்டில் இருப்பதற்காக, ஒரு பணியை, ஒன்பதாக பிரித்து, முதல் சர்ச்சையில் சிக்கினர். காரணம், ஒவ்வொரு பணியும் ரூ.80 லட்சத்தில் தொடங்கி, 98 லட்சம் வரை, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இவர்களின் "பனிப்போரால்' மாநகராட்சி நிர்வாகத்தில் "சலசலப்பு' ஏற்பட்டுள்ளது. மண்டலத்தலைவர்கள், குழுத்தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒப்பந்த பணியை பெற "படையெடுக்கும்' நிலையில், சில "செல்வாக்கானவர்களின்' பினாமிகளுக்கு பணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குவதம் செய்த சம்பவமும் நடந்துள்ளது. ஒப்பந்த பணியை பெற காட்டும் ஆர்வத்தை, பணியின் தரத்தில் காட்டலா@ம.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About