நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரதீய ஜனதா தொடர்ந்து பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது. அத்துடன் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுபற்றி பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:-
சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்யவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த இடத்திலும் எந்த தவறும் நடக்கவில்லை. கணக்கு தணிக்கை அதிகாரி, யூகங்களின் அடிப்படையில்தான் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு என்று கூறியிருக்கிறார். இது தவறான கணிப்பாகும்.
சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments