Tuesday, September 11, 2012

thumbnail

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 80 புள்ளி 4 அடிகளாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 80 புள்ளி 4 அடிகளாக உயர்ந்துள்ளது. அணைக்கு தொடர்ந்து  நீர் வந்து கொண்டிருக்கிறது.

மதியம் 12 மணி நிலவரப்படி, விநாடிக்கு 9 ஆயிரத்து 245 அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், விநாடிக்கு 2 ஆயிரத்து 7 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனிடேயே, காவிரியில் நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் புதன்கிழமை முதல் திறந்து விடப்படும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About