மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
விலைவாசி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் உயர்ந்து விட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை பரிசீலித்த மத்திய அரசு, ஊழியர்களுக்கு தற்போது வழங்கிவரும் 65 விழுக்காடு அகவிலைப்படியை 7 விழுக்காடு உயர்த்தி 72 விழுக்காடு வழங்க முடிவு செய்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவர்.
இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments