Wednesday, September 26, 2012

thumbnail

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கைகொடுத்த காற்றாலைகள்: 3600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

சென்னை, செப்.27-
 
தமிழகத்தின் மின்தேவை 11,500 மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவில், ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பரவலாக பலத்த மழை பெய்ததால் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 3,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் பற்றாக்குறையில் இருந்த மின்சார வாரியத்திற்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் ஓரளவு மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து மழை இருக்கும் என்று அறிவித்துள்ளதால் காற்றாலைகளால் போதிய மின்சாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
 
இதனால் மின்தடை நேரமும் குறைக்கப்படலாம். மத்திய மற்றும் மாநில புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ்நாட்டின் மின்நிலைமை முழுமையாக சீரடையும். அதுவரை காற்றாலைகள், மழை மற்றும் அணையில் உள்ள தண்ணீரை நம்பி தான் இருக்க வேண்டி உள்ளது.
 
அதுவும் ஓரிரு நாட்களில் காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரமும் குறைந்து விடும். அதற்கு பிறகு சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு தான் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அப்போது தான் மின்உற்பத்தி சற்று அதிகரிக்கும். அதுவரை மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About