Saturday, September 29, 2012

thumbnail

3,400 கிலோ எடையுள்ள ஜிசாட்,10 செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்,10, ஏரியன்,5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவிலிருந்து இன்று அதிகாலை விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்த ரூ.750 கோடி செலவில் ‘ஜிசாட்,10’ என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) உருவாக்கியது. இதில் 12 கு,பாண்ட், 12 சி,பாண்ட், 6 நீட்டிக்கப்பட்ட சி,பாண்ட்  என மொத்தம் 30 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இது டி.டி.எச் சேவை உட்பட அனைத்து தகவல் தொடர்பையும் மேம்படுத்தும். இது தவிர உள்நாட்டு விமானபோக்குவரத்துக்கு பயன்படும் ‘ககன்’ என்ற அதிநவீன ஜிபிஎஸ் சிக்னல் நேவிகேஷன் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் மொத்த எடை 3,400 கிலோ. இஸ்ரோவின் 101வது ஆய்வில் உருவாக்கப்பட்ட இந்த ஜிசாட்,10 செயற்கைகோள், இது வரை தயாரித்ததிலேயே மிக அதிக எடையுடன் கூடிய செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து ஏரியன்,5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.48 மணிக்கு ஏவப்படுகிறது. இதை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜிசாட்,10 ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக, அதன் திட்ட இயக்குனர் டி.கே.அனுராதா, செயற்கைகோள் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் திட்ட இயக்குனர் பிரகலாத ராவ், விண்வெளித்துறையின் கூடுதல் செயலாளர் சீனிவாசன், இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார் ஆகியோர் பிரெஞ்சு கயானாவில் உள்ளனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்,10 செயல்பாடை கண்காணிப்பார். ராக்கெட் ஏவப்பட்ட 27 வது நிமிடத்தில் ஜிசாட்,10, புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்படும். அது உடனடியாக இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்களை அனுப்பும். இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About