Saturday, September 01, 2012

thumbnail

பல ஊர்களில் சொத்து குவித்தது அம்பலம் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த டாமின் அதிகாரிகள் 3 பேர் கைது

மேலூர்: கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த  டாமின் அதிகாரிகள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். முறைகேட்டிற்கு மூல காரணமாக இருந்த மேலும் சில அதிகாரிகள் சிக்குவர் என்று தெரிகிறது. கைதான மூன்று பேரும் பல்வேறு ஊர்களில் சொத்துக்களை வாங்கி குவித்த  திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் ஊழலுக்கு உடந்தையாக இருந்த கனிம வளத்துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் 48 பேர் மீது நடவ டிக்கை எடுக்க  வேண்டுமென கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து பிஆர்பி நிறுவனத்தில் பணியாற்றிய கனிம வளத்துறை முன்னாள் ஊழியர் சண்முகவேல், கீழையூர் டாமின் அலுவலகத்தில் கணக்காளராக வேலைபார்த்த சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேலூரில் செயல்படும் கனிம வளத்துறை அதிகாரிகள் 3 பேர் கிரானைட் குவாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டு முறைகேட்டிற்கு உதவியது தெரிந்தது. கனிம வளத்துறை முதுநிலை திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர், சுரங்க பணி துணை அலுவலர்  ரகுபதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை மதுரை எஸ்பி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, முறைகேட்டுக்கு எப்படியெல்லாம் உதவினர் என்பதை அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை,  டாமின் ஊழியர்கள் 4 பேர் இந்த விவகாரத்தில்  கைது செய்யப்பட் டுள்ளனர். உயர் அதிகாரிகள் பலர் இந்த முறைகேட்டுக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About