டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில்
20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதில் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், மானிய விலையில் சிலிண்டர் வினியோகம் செய்வதில் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-
டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஸ்சுக்கு விலை கிலோ மீட்டருக்கு விலை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது போல் லாரிக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டன்னுக்கு இவ்வளவு கட்டணம் என்று அரசே நிர்ணயம் செய்து கொடுக்க வேண்டும். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடுகிறது. மேலும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் டீசல் விலையை கண்டித்து 20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் செய்வது முடிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments