Thursday, September 27, 2012

thumbnail

நேபாளத் தலைநகர் காத்மண்டு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் பலியாகினர்

நேபாளத் தலைநகர் காத்மண்டு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் பலியாகினர். சிதா ஏர் (SITA  AIR) என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், காத்மண்டிலிருந்து, எவரஸ்ட் சிகரப் பகுதியிலுள்ள லுக்லா (LUKLA) என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இமயமலையில் மலையேற்றம் மற்றும் சுற்றுலாவுக்கு வந்திருந்த வெளிநாட்டுப் பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர். விமானம் காத்மண்டிலிருந்து கிளம்பிய இரண்டு நிமிடத்தில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 16 பயணிகள் உள்ளிட்ட 19 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப் பிடித்ததற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை. கடந்த மே மாதம் நேபாளத்தில் இதேபோன்று நிகழ்ந்த விமான விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். அதில், ரஸ்னா விளம்பரத்தில் நடித்து தருணி சச்தேவ் என்ற குழந்தை நட்சத்திரம் உயிரிழந்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About