மங்களூரு: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பெண்கள் மீது இந்து அமைப்பினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மங்களூருவில் , ரிசார்ட் ஒன்றில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 5 இளம் பெண்கள், 8 இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ரிசார்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் அங்கிருந்த இளம் பெண்கள், இளைஞர்களை தாக்கினர்.தாக்கியவர்கள் இந்து ஜக்ரான்வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் கூடுதல் டி.ஜி.பி. பிபின் கோபாலகிருஷ்ணா கூறுகையில், சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. டி.வி. சானல் ஒளிபரப்பியதில், சிலர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதன் பேரில் 8 பேரை கைது செய்துள்ளோம். மேலும் தாக்கப்பட்ட இளம் பெண்கள், பிறந்த நாள் கொண்டாட தான் கலந்து கொண்டோம் , போதை விருந்தில் கலந்து கொள்ள வரவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இது பிறந்த நாள் கொண்டாட்டம் தான் , போதை விருந்து அல்ல என கூறினார்
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments