சென்னை, தமிழக சட்டசபையில் அரசின் ஓராண்டு சாதனையை பாராட்டி வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.. தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளில் சிக்கிக் கிடந்த தமிழகத்தை மீட்டு முதலமைச்சர் தலைமையில் ஒரு மிகச் சிறந்த நல்லாட்சி மக்கள் போற்றுகின்ற மகத்தான ஆட்சி நடைபெற்று வருவதாக அவர்கள் புகழ்ந்தனர் சூட்டினார்கள்.
தமிழக அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை வரவேற்று, பாராட்டி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள். தலைவர்களின் பேச்சு வருமாறு: செ.கு.தமிழரசன் (அகில இந்திய குடியரசு கட்சி): தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சி திருநாள். நாடு போற்றும் வகையில் சிறப்பானதொரு ஆட்சியை முதலமைச்சர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.இன்று காலை முதலமைச்சரின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு வரும் வழிநெடுக மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி வரவேற்றதை காண முடிந்தது.
அந்த கடற்கரையோரம் குடிகொண்டுள்ள அண்ணாவும், எம்ஜிஆரும் கூட அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.ஒருநல்ல அரசுக்கு உதாரணம் அந்த அரசு மக்களுக்கு நன்மை செய்கிற அரசாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறும் அரசாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார். அது போன்ற மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக மக்களுக்கு நாள்தோறும் நன்மைகள் செய்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்று இந்த ஓராண்டு ஆட்சி சாதனைகளை செய்தித்துறை 7 நூல்களாக கொடுத்திருக்கிறது. பத்திரிகைகளிலும் 4 முழு பக்க விளம்பரமாக கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி இந்த சாதனைகளை பதிவு செய்வதுதான் நாளைய வரலாற்றுக்கு ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிலைத்த, புகழ்மிக்க முதலமைச்சராக நிச்சயம் இவர் அடையாளப் படுத்தப்படுவார். ஆட்சி திறனும், மாட்சிமையும், தனித்துவமும் மிக்க தலைவராக ஒரு தலை சிறந்த தேசியவாதியாக சமூக, சமத்துவவாதியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவேன் என்ற வாக்குறுதிபடி மிக தாராளமாக, ஏராளமான நலத்திட்டங்களை தந்துள்ள இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும். இந்த ஆட்சியும் தொடர்ந்து nullடிக்க வேண்டும். உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை): வாக்களித்த தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தந்து வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார். மீனவர்கள் உயிர் காக்கவும், உடமை காக்கவும் வழிவகை கண்டார். இதே சட்டப் பேரவையில் இலங்கை தமிழர்கள் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்த கருணை உள்ளத்தோடு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக அரசு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு சாதனைகளை வரவேற்று, பாராட்டி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசினார்கள். தலைவர்களின் பேச்சு வருமாறு: செ.கு.தமிழரசன் (அகில இந்திய குடியரசு கட்சி): தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சி திருநாள். நாடு போற்றும் வகையில் சிறப்பானதொரு ஆட்சியை முதலமைச்சர் தலைமையேற்று நடத்தி வருகிறார்.இன்று காலை முதலமைச்சரின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு வரும் வழிநெடுக மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி வரவேற்றதை காண முடிந்தது.
அந்த கடற்கரையோரம் குடிகொண்டுள்ள அண்ணாவும், எம்ஜிஆரும் கூட அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.ஒருநல்ல அரசுக்கு உதாரணம் அந்த அரசு மக்களுக்கு நன்மை செய்கிற அரசாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெறும் அரசாக இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார். அது போன்ற மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக மக்களுக்கு நாள்தோறும் நன்மைகள் செய்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இன்று இந்த ஓராண்டு ஆட்சி சாதனைகளை செய்தித்துறை 7 நூல்களாக கொடுத்திருக்கிறது. பத்திரிகைகளிலும் 4 முழு பக்க விளம்பரமாக கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி இந்த சாதனைகளை பதிவு செய்வதுதான் நாளைய வரலாற்றுக்கு ஒரு சான்றாக அமையும். அந்த வகையில் வரலாற்றில் ஒரு நிலைத்த, புகழ்மிக்க முதலமைச்சராக நிச்சயம் இவர் அடையாளப் படுத்தப்படுவார். ஆட்சி திறனும், மாட்சிமையும், தனித்துவமும் மிக்க தலைவராக ஒரு தலை சிறந்த தேசியவாதியாக சமூக, சமத்துவவாதியாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவேன் என்ற வாக்குறுதிபடி மிக தாராளமாக, ஏராளமான நலத்திட்டங்களை தந்துள்ள இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டும். இந்த ஆட்சியும் தொடர்ந்து nullடிக்க வேண்டும். உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை): வாக்களித்த தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தந்து வரலாற்று சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார். மீனவர்கள் உயிர் காக்கவும், உடமை காக்கவும் வழிவகை கண்டார். இதே சட்டப் பேரவையில் இலங்கை தமிழர்கள் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்த கருணை உள்ளத்தோடு தீர்மானம் கொண்டு வந்தார்.
04:46
Tags :
jayalalitha
,
latest tamil news
,
one year
,
Tamilnadu cm
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments