Saturday, May 26, 2012

thumbnail

முக அழகு குறிப்புகள்

 தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். 



ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். 


கோடை கால வெயில் கொடுமையிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க எத்தனையோ லோஷன்கள் உள்ளிட்டவ இருக்கின்றன. இருந்தாலும், நாம் செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கேரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது.


இந்த கேரட் ஃபேசியல் மாஸ்க்கை எண்ணெய் பசை மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள் செய்யலாம். சரி கேரட் ஃபேசியல் மாஸ்க் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா...


கேரட் ஃபேசியல் மாஸ்க் -செய்முறை


தேவையான பொருட்கள் : 2-3 கேரட் , 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் , 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ்


பயன்படுத்தும் முறை:


கேரட்டை வேகவைத்து மசித்து கொள்ளவும் , பின்னர் அதனுடன் 1/2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேவையான அளவு தண்ணீர் கலந்து மாஸ்க் செய்யவும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.


பிறகென்ன கேரட்டை எடுங்க, பேசியல் மாஸ்க்கை செய்யுங்க, பொலிவான முகத்துடன் வெளியில் கிளம்புங்க..

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

2 Comments

avatar

நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/health_women-beauty-tips பெண்களுக்கான அழகு குறிப்புகளை சிறப்பாக தொகுத்துள்ளது. நீங்களும் பாருங்கள் ! பயன் பெறுங்கள் !

Reply Delete
avatar

I like to read this site https://news.ibctamil.com/ta/beauty-tips/ because I Got More Natural Beauty Tips from here

Reply Delete

About