Monday, May 28, 2012

thumbnail

சென்னையில் டீசலை தொடர்ந்து பெட்ரோலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் எந்த வாகனத்தையும் இயக்க முடியாமல் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை நகரில் உள்ள ஒரு சில பெட்ரோல் நிலையங்களை தவிர மற்ற அனைத்து நிலையங்களிலும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. சில நிலையங்களில் ஒட்டு மொத்தமாக பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சில நிலையங்களில் குறைந்த அளவே எரிபொருள் கிடைப்பதால், வாகன ஓட்டிகள் அதிகாலை முதலே பெட்ரோல் நிலையங்களில் நீண்டநேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச்செல்கின்றனர். இது குறித்து விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த அளவே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்வதாக கூறுகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டிற்கான காரணத்தை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

1 Comments

avatar

எரிபொருள் விலை ஏற்றத்தை பற்றி மக்கள் கவலைபடுவதை விட்டு டீஸல் ,பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

Reply Delete

About