புகையிலை எதிர்ப்பு நாளான மே 31 ஆம் தேதி, பிகார் அரசு துணிந்து நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்கா, புகையிலையால் ஆன ஜர்தா பான் விற்பனைக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் பிகார் அரசின் அந்த அறிவிப்பு. மிக அதிக அளவில் குட்காவும், கைணி எனப்படும் புகையிலையும், ஜர்தா பீடாவும் பழக்கத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் துணிந்து தடை விதித்திருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டுக்குரியவர்.
இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.புகையிலையை, பீடி சிகரெட்டாகப் பயன்படுத்துவோர் ஒருபுறம் இருக்க, புகையில்லாப் புகையிலை வகையறாக்களாக பான், குட்கா, கைணி முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது. பல இடங்களில் இதற்குத் தடை உள்ளது. அபராதம் உள்ளது. ஆனால், நேரடியாகப் புகையிலையை வாயில் அடக்கிக்கொள்ளலாம். இதைச் சட்டம் அனுமதிக்கிறது.
இந்தியாவில் பான், குட்கா விற்பனைக்குத் தடை விதித்துள்ள 3-வது மாநிலம் பிகார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசமும், கேரளமும் குட்கா, ஜர்தா பான் விற்பனைக்குத் தடை விதித்துள்ளன.புகையிலையை, பீடி சிகரெட்டாகப் பயன்படுத்துவோர் ஒருபுறம் இருக்க, புகையில்லாப் புகையிலை வகையறாக்களாக பான், குட்கா, கைணி முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது. பல இடங்களில் இதற்குத் தடை உள்ளது. அபராதம் உள்ளது. ஆனால், நேரடியாகப் புகையிலையை வாயில் அடக்கிக்கொள்ளலாம். இதைச் சட்டம் அனுமதிக்கிறது.
21:37
Tags :
ban kutka
,
bihar cm
,
bon
,
latest tamilnadu news
,
nithish kuman
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments