Sunday, May 27, 2012

thumbnail

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.


மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மாதிரி எரிபொருளை அகற்றும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் நாராயணசாமி கூறினார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About