பீதி கிளப்புகின்றன:தமிழக -கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை குறித்து, இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் பிரச்னை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில், கேரள மாநில அரசும், எதிர்க்கட்சிகளும், அணை பலமிழந்து விட்டது என்றும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றெல்லாம் பீதியை கிளப்பி வருகின்றன.இந்த சம்பவங்கள் குறித்தும், அணை உடைந்தால் ஏற்படும் அபாயம் குறித்தும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், "ஜங்ஷன்' என்ற பெயரில் மலையாள திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தான், கேரள நீர்வளத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் பேராசிரியர் வேடத்தில் நடித்து வருகிறார்.
வசனங்கள் பதிவு : அணைக்கட்டு குறித்து ஆய்வு நடத்த வரும் மாணவர்களிடம், அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளிக்கும் காட்சியில் அவர் நடித்து வருகிறார். படத்தில் அவர் பேசும் வசனங்களை பதிவு செய்யும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே தைக்காடு பகுதியில் உள்ள தனியார் ஒலிப்பதிவு கூடத்தில் மிகவும் ரகசியமாக பதிவு செய்யப்பட்டது. இதில், அமைச்சர் ஜோசப் கலந்துகொண்டு, அவரே தனது குரலில் வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசினார்.இப்படத்தை சசிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். கேரள அமைச்சரவையில் வனம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்து வரும் கே.பி.கணேஷ்குமார், பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர். அவரை தொடர்ந்து, தற்போது பி.ஜே.ஜோசப்பும், நடிகர் என்ற புது அவதாரம் எடுத்துள்ளார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments