Sunday, May 27, 2012

thumbnail

ஜூலை 5-ந்தேதி நடக்கும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு 38,500 பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடந்த மே 15-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 38,500 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றுள்ளனர்.


விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவரிசை பட்டியல் ஜூன் 25-ந்தேதி வெளியிடப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்-ஆப் மதிப்பெண் போட்டி உள்ளது. இதனால் எம்.பி.பிஎஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் கட்-ஆப் மதிப்பெண் 190-க்கு கீழ் பெற்றுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிப்பார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

கடந்த ஆண்டு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About