சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்தியாவில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 749 மாணவ-மாணவியர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 80.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.94 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 86.21 சதவீதம் மாணவிகளும், 75.80 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 67,707 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். அதில் 61,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராகவும், சென்னை மண்டலத்தில் 2வது மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை மண்டலத்தில் 90.59 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 3,275 மாணவிகள், 4, 534 மாணவர்கள் என மொத்தம் 7, 809 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,315 மாணவிகளும், 4,324 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.85 சதவீரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் 249 பேர் தேர்வு எழுதினர். அதில் 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் உடனடி தேர்வு எழுத வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உடனடி தேர்வு வரும் ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறும்.
விடைத்தாள்களை சரிபார்க்க விரும்புபவர்கள் இன்று முதல் 5 நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நாட்டிலேயே சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 749 மாணவ-மாணவியர் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 80.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.94 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 86.21 சதவீதம் மாணவிகளும், 75.80 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில் 67,707 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். அதில் 61,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர் சஞ்சய் கணபதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதல் மாணவராகவும், சென்னை மண்டலத்தில் 2வது மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை மண்டலத்தில் 90.59 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 3,275 மாணவிகள், 4, 534 மாணவர்கள் என மொத்தம் 7, 809 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,315 மாணவிகளும், 4,324 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.85 சதவீரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் 249 பேர் தேர்வு எழுதினர். அதில் 239 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் உடனடி தேர்வு எழுத வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உடனடி தேர்வு வரும் ஜூலை மாதம் 16ம் தேதி நடைபெறும்.
விடைத்தாள்களை சரிபார்க்க விரும்புபவர்கள் இன்று முதல் 5 நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ. 300 கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நாட்டிலேயே சென்னை மண்டலத்தில் தான் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
21:11
Tags :
cbse results
,
Exam Results 2012-2013: HSC / +2 (State Board) / Plus Two / SSLC / Matric / CBSE / Ango Indian / OSLC / X / XII Results - Tamil Nadu - Higher Secondary ..
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments