Thursday, May 31, 2012

thumbnail

கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு மே 1-ம் தேதி முதல் அனைத்து அரசு, உதவி பெறும், சுயநிதி பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.இந்த நிலையில் கோடை வெயில் குறையாததால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் புதுவையில் மட்டும் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, வெள்ளிக்கிழமை (ஜூன் 1) காலை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About