Thursday, January 27, 2011

thumbnail

எஸ்.ஆர்.எம் ,லண்டன் ராயல் கல்லுரி ஒப்பந்தம்

சென்னை : லண்டன் ராயல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர். எம்., பல்கலைக்கும் இடையில், மனநல மருத்துவப் பிரிவை மேம்படுத்தும் வகையில், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.லண்டன் ராயல் கல்லூரி மற்றும் எஸ்.ஆர். எம்., பல்கலையும், மனநல மருத்துவப் பிரிவில் கூட்டாக செயல்படுவதற்கான முயற்சிகள் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லூரி வளா கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராயல் கல்லூரி மனநலப் பிரிவு தலைவர் தினேஷ் புக்ரா மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன் ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பேராசிரியர் கணேசன் மற்றும் இந்திய மனநல மருத்துவ சங்க தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, இருதரப்பு மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் நவீன சிகிச்சை குறித்த பயிற்சி பெறவும், புதுவகை ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் முடியும்; தமிழக மக்களுக்கு நவீன முறையிலான சிறந்த மருத்துவமும் கிடைக்கும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About